மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த மூவரை வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இது குறித்து சந்தேகத்தின்பேரில் வாடகைக் கார் ஓட்டுநரைக் கண்டறிந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலா வந்த மூவரை வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மும்பையில் உள்ள அம்பானியின் அன்டிலியா இல்லம் அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மும்பை காவல் துறையினர் வாடகை கார் ஓட்டுநரைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தனது காரில் கூகுள் வரைபடம் பணிசெய்யாததால், வேறொரு கார் ஓட்டுநரிடம் வழிகேட்டு வந்ததாகவும், தவறுதலாக அம்பானி இல்லத்திற்கு வந்ததாகவும் கூறினார். இதனால் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் இந்த இடம் குறித்து விசாரித்ததாகவும் கூறினார்.
காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு, ஓட்டுநரை விடுவித்தனர்.