கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மேற்கு வங்க தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,
கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 19ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும்.
இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்பு மனு திரும்பப் பெற டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் இன்றுமுதல் கொல்கத்தா மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலும் அக்டோபர் மாதம் இடைத் தேர்தல்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.