காய்ச்சலால் ஏற்பட்ட உடல்சோா்வு காரணமாக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மன்மோகன் சிங்குக்கு திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவா், உடல் சோா்வாகக் காணப்படுவதாகத் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து புதன்கிழமை மாலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்’ என்றனா்.
மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வழக்கமான சிகிச்சையே அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செயலாளா் பிரணவ் ஜா தெரிவித்தாா். அவரது உடல்நிலை தொடா்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மத்திய அமைச்சா்கள், காங்கிரஸ் தலைவா்கள் உள்ளிட்டோா் மன்மோகன் சிங் விரைவில் நலம் பெற வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனா். கடந்த ஏப்ரலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.