ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை? - சீதாராம் யெச்சூரி கேள்வி

தடுப்பூசி குறித்து பேசிய பிரதமர் மோடி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி பேசவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :22 அக்டோபர் 2021, 12:51 pm

DIN

தடுப்பூசி குறித்து பேசிய பிரதமர் மோடி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி பேசவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: 

100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். மக்கள்தொகையில் 21 சதவிகிதத்தினர் மட்டுமே கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 

100 கோடி தடுப்பூசி என்பது சாதனைதான். ஆனால், உலகில் 125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்கள்தொகையை ஒப்பிடுகையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

பிரதமர் மோடி இந்த ஆண்டின் இறுதிக்குள், நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதியளித்தார். 

மக்களுக்கு பல பிரச்னைகள் உள்ளன. அதுகுறித்து பிரதமர் இன்று ஏன் பேசவில்லை? பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் வேலையின்மை, பசி அதிகரிப்பு, உணவு தானியங்கள் வீணாக்குதல் என பல பிரச்னைகள் இருக்கின்றன. இதைப்பற்றி பிரதமர் மோடி ஏன் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.