பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் சேவியர் சிட்டிலப்பிள்ளி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "மாநிலத்தில் புதிதாக நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது அரசுக்கு இல்லை எனத் தெரிவித்தார்.
மேலும், "எனினும் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களைத் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மாநில மகளிர் ஆணைய தரவுகளின்படி, 2010ஆம் ஆண்டிலிருந்து 1100க்கும் மேற்பட்ட வரதட்சணை தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 50 சதவிகித வழக்குகள் திருவனந்தபுரம் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தரவுகளின்படி, கேரள மாநிலத்தில் 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பாக 32 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



