காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கோவாவில் இதற்கு மட்டும்தான் எனக்கு அதிகாரம் உள்ளது: ப. சிதம்பரம்

​கோவாவில் காங்கிரஸை மறுகட்டமைப்பு செய்து, மீட்டெடுக்கும் பணிதான் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சனிக்கிழமை தெரிவித்தார்.

கோப்புப்படம்

Published On :28 ஜனவரி 2024, 9:34 am IST


கோவாவில் காங்கிரஸை மறுகட்டமைப்பு செய்து, மீட்டெடுக்கும் பணிதான் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சனிக்கிழமை தெரிவித்தார்.

கோவாவில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ப. சிதம்பரம் தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மூன்று நாள் பயணமாக அவர் வெள்ளிக்கிழமை கோவா வந்தார். அங்கு தேர்தல் குழுத் தலைவர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்டோருடன் பல்வேறு கூட்டங்களை அவர் நடத்தினார்.

இதன்பிறகு, அடுத்தாண்டு வரவுள்ள பேரவைத் தேர்தலில் ஒரே சிந்தனையுடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்து அவர் கூறியது:

"கட்சியை மறுகட்டமைப்பு செய்து மீட்டெடுப்பது, கமிட்டிக்களை மறுசீரமைப்பு செய்வது மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே எனக்கு அதிகாரம் உள்ளது."

முன்னதாக கடந்த வாரம் கோவா வந்தபோது, கோவா பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தயாராகி வருவதாகக் கூறினார். மேலும் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.