நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்தி மும்பை சாதனை

நாட்டில் முதல்முறையாக ஒரு கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி மும்பை மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

News image

ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்தி மும்பை சாதனை

Updated On :4 செப்டம்பர் 2021, 4:30 pm IST

நாட்டில் முதல்முறையாக ஒரு கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி மும்பை மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாவட்டம் எனும் சாதனையை மும்பை படைத்துள்ளது.

மும்பையில் மொத்தம் 507 கரோனா தடுப்பூசிகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சனிக்கிழமை நிலவரப்படி மும்பை மாவட்டத்தில் 1 கோடியே 63 ஆயிரத்து 497 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 72 லட்சத்து 75 ஆயிரத்து 134 முதல் தவணை கரோனா தடுப்பூசிகளும், 27 லட்சத்து 88 ஆயிரத்து 363 இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசிகளும் அடக்கம்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி புதிதாக 422 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.