சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

நீட் மூலம் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது பாஜக: பிரியங்கா

நீட் போன்ற தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 12:20 pm

DIN

நீட் போன்ற தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது.

நமது தேசத்தின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்கள் சொல்வதைக் கேட்டு உதவுவது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கடினமான செயலா?.

அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு முக்கியமல்லவா? என்று நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.