மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நீட் தோ்வு தொடங்கியது; தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வான நீட் தோ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. 

News image
Updated On :12 செப்டம்பர் 2021, 8:36 am

DIN

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வான நீட் தோ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. மாலை 5 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். கரோனா பரவலால் மாணவா்களின் நலன் கருதி நீட் தோ்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ், பஞ்சாபி, மலையாளம் மொழிகள் முதல்முறையாக சேர்க்கப்பட்டு 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். 

தமிழகத்தில் இருந்து நீட் தோ்வை எழுத, 1,10,971 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில், 40,376 மாணவா்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனா். மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளார். தமிழகத்தில் 18 நகரங்களில் 224 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 

இன்று பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு முகக்கவசம் வழங்கி, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டன. கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் தேர்வு நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.