அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

‘சித்துவிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது’: போர்க்கொடி தூக்கிய அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநிலத் தலைவர் சித்துவிற்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது என முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த அமரீந்தர் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

News image
அமரீந்தர் சிங்
Updated On :18 செப்டம்பர் 2021, 2:54 pm

DIN

பஞ்சாப் மாநிலத் தலைவர் சித்துவிற்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது என முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த அமரீந்தர் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டதிலிருந்து முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் சித்துவிற்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. 

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தகுதியான நபர் என யாரை நினைக்கிறதோ அவரை நியமிக்கட்டும் என தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தது குறித்து பேட்டியளித்துள்ள அவர், “நவ்ஜோத் சிங் சித்து ஒரு திறமையற்ற மனிதர். அவர் ஒரு பேரழிவாக இருக்கப்போகிறார். அடுத்த முதல்வராக அவர் முன்மொழியப்பட்டால் அதனை நான் எதிர்ப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். அவர் (பாகிஸ்தான் இராணுவத் தலைவர்) கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக இருக்கிறார். அவர் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் எதிர்ப்பேன்” என போர்க்கொடி தூக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.