/

அமித்ஷாவை சந்திக்கும் தமிழக ஆளுநர்: நாளை தில்லி பயணம்

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தில்லி செல்கிறார்.

News image

அமித்ஷாவை சந்திக்கும் தமிழக ஆளுநர்: நாளை தில்லி பயணம்

Updated On :22 செப்டம்பர் 2021, 4:09 pm IST

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தில்லி செல்கிறார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 19ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக நாளை அவர் தில்லி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்த பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக ஆளுநரின் தில்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.