தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தில்லி செல்கிறார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 19ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக நாளை அவர் தில்லி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இதையும் படிக்க | இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்த கனடா
இந்த பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக ஆளுநரின் தில்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.