இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தில்லி: இன்ஸ்டாகிராமில் பெண்களை மிரட்டிவந்த இளைஞர் கைது

இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களை தொடர்ந்து மிரட்டிவந்த தில்லியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர். 

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 3:00 pm IST

இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களை தொடர்ந்து மிரட்டிவந்த தில்லியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை தெரிவித்ததாவது, 

கைது செய்யப்பட்ட இளைஞர் தில்லியில் ஆனந்த் பர்பத்தில் வசிக்கும் மிதுன் திவாரி எனத் தெரியவந்தது. 

கடந்த 17ம் தேதி, சமூக ஊடகத் தளத்தில் பல கணக்குகளை உருவாக்கிய ஒரு நபர்,  தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகவும், தன்னைக் கடத்திச்சென்று தனது புகைப்படங்களை வைரலாக்குவதாக மிரட்டுவதாகவும் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார் என்று மூத்த காவல்அதிகாரி கூறினார். 

புகாரின் பேரில், காவல்துறையினர் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஆய்வு செய்து, அவனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். 

22 வயதாகும் திவாரி சமூக வலைத்தளங்களைக் கையாள்வதில் பலே கில்லாடி. இவர் 12-க்கும் மேற்பட்ட பெண்களைப் பின்தொடர்ந்து மிரட்டி வந்தது தெரியவந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.