மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி வன்முறை: 12 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் 

ஜஹாங்கீர்புரி வன்முறை வழக்கில் கைதான 14 பேர்களில் 12 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து தில்லி ரோகிணி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2022, 4:32 pm

DIN

ஜஹாங்கீர்புரி வன்முறை வழக்கில் கைதான 14 பேர்களில் 12 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து தில்லி ரோகிணி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் உள்ள ஜஹாங்கீர்பூர் பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்து அமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இரு தரப்பிரனர் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி தாக்கிதாக்குதல் நடத்தியதால் அனுமன் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பின்னர் ஜஹாங்கீர்பூர் பகுதியிலுள்ள இருதரப்பினரிடையே அமைதி திரும்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.  இதில் கலவரத்தில் ஈடுபட்டு கற்களை வீசித் தாக்குதல் நடத்தியவர்களை ஒப்படைக்குமாறும் காவலர்கள் வலியுறுத்தினர். இதன் விளைவாக 8 பேரை காவலர்கள் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மொத்தம் 14 பேரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது. காவல் துணை ஆய்வாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 21 வயது இளைஞரையும் காவலர்கள் கைது செய்தனர். மேலும் அந்த இளைஞரிடமிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே கைதான 14 பேரையும் தில்லி ரோகிணி நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது கைதான 14 பேர்களில் 12 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்தும், மற்ற இருவருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.