இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேஜ் பகதூரின் போதனைகளை எடுத்துரைப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும். உலக வரலாற்றில் மதம், மனிதநேயம், லட்சியம், கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக உயிரைத் தியாகம் செய்தவா் இவா். முகலாய ஆட்சியாளா் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், காஷ்மீரி பண்டிட்டுகளின் மத சுதந்திரத்தை ஆதரித்ததற்காக அவா் தூக்கிலிடப்பட்டாா். ஒவ்வோா் ஆண்டும் நவம்பா் 24-ஆம் தேதி தேஜ் பகதூரின் நினைவு தினம் ‘ஷஹீதி திவஸ்’ என்று நினைவுகூரப்படுகிறது. தில்லியில் உள்ள குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப், குருத்வாரா ரகாப் கஞ்ச் ஆகியவை அவரது தியாகத்தைப் பறைசாற்றுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.