மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜஹாங்கீர்புரி வன்முறை: குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் மேற்கு வங்கத்தில் கைது

தில்லி ஜஹாங்கீர் புரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் தில்லி காவல் துறையினரால் மேற்கு வங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஏப்ரல் 2022, 2:54 pm

DIN


தில்லி ஜஹாங்கீர் புரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் தில்லி காவல் துறையினரால் மேற்கு வங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லி காவல் துறை இதுபற்றி கூறியதாவது:

"தில்லி காவல் துறை குழு இவரைக் கடந்த இரண்டு வாரங்களாகத் தேடி வருகிறது. மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. மேற்கு வங்கத்திலுள்ள சிறப்புப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவின் பல்வேறு குழுக்கள் அவரை இன்று அவரது உறவினர் கிராமத்தில் வைத்து கைது செய்தன.

ஜஹாங்கீர்புரி வன்முறைக்குப் பிறகு தப்பியோடிய அவர் தனது இடங்களை மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறார். அவர் மேற்கு வங்கத்தில் இடம்பெயர்ந்துகொண்டே இருந்திருக்கிறார்."

இந்த வழக்கு தொடர்பாக தில்லி காவல் துறை இதுவரை 3 சிறார்கள் உள்பட மொத்தம் 30 பேரைக் கைது செய்துள்ளது. முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) காலை ஜாஃபர் மற்றும் பாபுதின் எனும் சகோதரர்களைக் கைது செய்தது தில்லி காவல் துறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.