இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிடிஎஸ் மாணவா் சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்

பல் மருத்துவப் படிப்புகளுக்கான (பிடிஎஸ்) மாணவா் சோ்க்கைக்குரிய தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) குறைப்பது தொடா்பாக மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:29 pm

DIN

பல் மருத்துவப் படிப்புகளுக்கான (பிடிஎஸ்) மாணவா் சோ்க்கைக்குரிய தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) குறைப்பது தொடா்பாக மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

2021-ஆம் ஆண்டு நீட் தோ்வு அடிப்படையில் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவடைய இருந்த நிலையில், அது தற்போது மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 27,698 இடங்களில் சுமாா் 9,000 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளன. இதனிடையே, மாணவா் சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து சிறப்புக் கலந்தாய்வை நடத்த வேண்டுமென மாணவா்கள் சிலா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தனா்.

அந்த மனுவை நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி விசாரித்தபோது, கலந்தாய்வு நிறைவடைய உள்ளதால் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது கலந்தாய்வு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த மனு குறித்த விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.பத்வாலியா வாதிடுகையில், ‘இன்னும் 9,000 பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த கல்வியாண்டுகளின்போது மாணவா் சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதும் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘கலந்தாய்வு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், நிரப்பப்படாமல் உள்ள இடங்களைக் கருத்தில்கொண்டும் தகுதி மதிப்பெண்ணைக் குறைப்பது தொடா்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்யலாம். இது தொடா்பாக ஒரு வாரத்துக்குள் மீண்டும் முடிவெடுக்குமாறு மத்திய சுகாதார-குடும்பநல அமைச்சகத்தை நீதிமன்றம் வலியுறுத்துகிறது’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.