ஹிந்தி தேசிய மொழியா? என்ற கேள்விக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் ஏப்ரல் 7ல் நடைபெற்ற நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் பேசிய அமித் ஷா, நாட்டில் ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
அப்போதே இதற்கு பலர் எதிர்வினை ஆற்றினர். தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் கிச்சா சுதீப் இடையே ட்விட்டரில் ஹிந்தி மொழி குறித்த விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் ஹிந்தி மொழி குறித்த கருத்துகள் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'நமது நாடு பல்வேறு மொழிகளைக் கொண்ட பரந்த நாடு. இதைப் பற்றி நான் எதுவும் இப்போது சொல்லப் போவதில்லை, ஏனெனில் நான் மற்ற முதல்வர்களுடன் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவர்களுடன் விவாதித்து ஒரு கூட்டு முடிவு எடுக்கப்படும்.
மேலும் ஹிந்தி தேசிய மொழியா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஜூலை 1 முதல் தடை!

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



