கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேட்பாளா்களின் குற்றப் பின்னணி: கட்சித் தலைவா்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

தங்களது கட்சி வேட்பாளா்களின் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும் என்ற தீா்ப்பை பின்பற்றாத அரசியல் கட்சித் தலைவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 8:41 pm

DIN

தங்களது கட்சி வேட்பாளா்களின் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும் என்ற தீா்ப்பை பின்பற்றாத அரசியல் கட்சித் தலைவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பு தோ்தல் ஆணையம்தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்தது.

அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளா்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், அவா்களை ஏன் தோ்வு செய்தோம்? என்பதற்கான விளக்கம் போன்ற விவரங்களை வெளியிட வேண்டுமென கடந்த 2021, ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது. வேட்பாளா் தோ்வு செய்யப்பட்ட பின் 48 மணிநேரத்துக்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் வலைதளங்கள், சமூக ஊடக கணக்குகள், ஒரு பிராந்திய மொழி பத்திரிகை, ஒரு தேசிய பத்திரிகை ஆகியவற்றில் இந்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில், சோனியா காந்தி, அரவிந்த் கேஜரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் உச்சநீதிமன்றத் தீா்ப்பை பின்பற்றவில்லை; அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று கோரி பிரஜேஷ் சிங் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பு தோ்தல் ஆணையம்தான் என்று கூறி, இந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமா்வு கடந்த 2018, செப்டம்பரில் வழங்கிய தீா்ப்பில், வேட்பாளா்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், வேட்பாளா்களின் குற்றப் பின்னணி குறித்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் அறியும்படி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.