பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நசுங்கிய முழங்கையை மீள்உருவாக்கிய எய்ம்ஸ்: அதுவரை காலுடன் தைக்கப்பட்டிருந்த உள்ளங்கை

நாட்டிலேயே முதல் முறையாக, இயந்திரத்தில் சிக்கி நசுங்கிப் போன முழங்கையை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மீள் உருவாக்கம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

News image

தில்லி எய்ம்ஸ் (கோப்புப்படம்)

Updated On :1 பிப்ரவரி 2024, 3:31 pm IST


புது தில்லி: நாட்டிலேயே முதல் முறையாக, இயந்திரத்தில் சிக்கி நசுங்கிப் போன முழங்கையை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மீள் உருவாக்கம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

27 வயது இளைஞருக்கு நசுங்கிப் போன முழங்கையை வெட்டி எடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்படியாக பல்வேறு அறுவை சிகிச்சைகள் மூலம் புதிதாக ஒரு கையை மீள்உருவாக்கம் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காலை 5 மணிக்கு, இயந்திரத்தில் சிக்கி நசுங்கிய கையுடன் வருகிறார்.

ஹைடராலிங் இயந்திரத்தில் சிக்கி அவரது இடது முழங்கை முற்றிலும் சேதமடைந்திருந்தது. முழங்கையின் தோல், தசைகள், நரம்புகள், எலும்புகள் என 5 செ.மீ. தூரத்துக்கு சேதமடைந்திருந்தது. ஆனால் அவரது உள்ளங்கை சேதமடையவில்லை.

அவரது முழங்கை இல்லாமல் அதனுடன் உள்ளங்கையை இணைப்பது என்பது இயலாத காரியம் என்பதையும் இது மிகவும் சிக்கலான முறை என்பதையும் மருத்துவர்கள் உணர்ந்தார்கள்.

இந்த நிலையில் வழக்கமாக செயற்கை கை பொருத்துவார்கள் அல்லது சேதமடைந்த கையை அகற்றிவிட்டு, மீதமிருக்கும் கையுடன் உள்ளங்கையை பொருத்துவார்கள். அப்போதுதான் அவரது முழங்கையை மீள்உருவாக்கம் செய்து அதனுடன் உள்ளங்கையை பொருத்துவது என்று முடிவெடுத்தார்கள்.

அதற்காக அவரது உள்ளங்கையை அகற்றி, அந்த நபரின் இடது காலில் ரத்த ஓட்டம் கிடைக்கும்படி இணைத்துவிட்டனர். இப்போது உள்ளங்கை பத்திரமாக உள்ளது.

பிறகு சேதமடைந்த கையை வெட்டி அகற்றிவிட்டு, முழங்கைக்குத் தேவையான திசுக்கள், நரம்புகள், தோல் போன்றவை கால் மற்றும் தொடைப் பகுதிகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு முழங்கைப் பகுதி உருவாக்கி, பிறகு அதனுடன் காலிலிருந்து வெட்டப்பட்ட உள்ளங்கை நரம்புகளுடன் இணைக்கப்பட்டன.

தற்போது, அவரது கை இயல்பான சில வேலைகளை செய்யத் தொடங்கியிருக்கிறது, எழுதுவது, சிறிய பொருள்களை எடுப்பது போன்றவற்றை இயல்பாக செய்கிறார் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த சிகிச்சை சுமார் 3 ஆண்டு காலமாக படிப்படியாக பல்வேறு அறுவைசிகிச்சைகள் மூலம் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.