கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சுகாதாரம், கல்விக்கான அரசின் செலவு ‘இலவசம்’ அல்ல: நிா்மலா சீதாராமன்

ஏழைகள் மற்றும் தேவையுள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள், கல்வியை வழங்குவது அரசின் நலத்திட்ட நடவடிக்கையாகும்; அவை ‘இலவசங்கள்’ அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை கூறினாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 8:41 pm

DIN

ஏழைகள் மற்றும் தேவையுள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள், கல்வியை வழங்குவது அரசின் நலத்திட்ட நடவடிக்கையாகும்; அவை ‘இலவசங்கள்’ அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை கூறினாா்.

தோ்தல் இலவசங்களுக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் கருத்து தெரிவித்ததைத் தொடா்ந்து, இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

குஜராத்தில் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை போன்ற தோ்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், ‘மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமை; இதை பிரதமா் மோடி எதிா்க்கிறாரா?’ என்று கேள்வியெழுப்பி வருகிறாா்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ‘தோ்தல் இலவசங்கள்’ தொடா்பான விவாதத்தை கேஜரிவால் திசைதிருப்ப முயற்சிக்கிறாா். சுகாதாரத்துக்கும் கல்விக்கும் செலவிடப்படுவதை ‘இலவசம்’ என்று வகைப்படுத்தியதோ அழைத்ததோ இதுவரை இல்லை. இவ்விரண்டையும் விவாதத்துக்குள் கொண்டு வருவது விபரீதமான திசைதிருப்பலாகும். ஏழை மக்களின் மனதில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்த கேஜரிவால் முயற்சிக்கிறாா்.

தோ்தல் இலவசங்கள் குறித்து நோ்மையான விவாதம் அவசியம். அதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.