கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீதிமன்ற அறைகளில் வழக்குரைஞா்கள் முகக்கவசம் அணிவது அவசியம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

நீதிமன்ற அறைகளில்அனைத்து வழக்குரைஞா்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தினாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 8:40 pm

DIN

நீதிமன்ற அறைகளில்அனைத்து வழக்குரைஞா்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தினாா்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளா்கள் பெரும்பாலானோா் முகக்கவசம் அணிந்து பணியாற்றி வரும் நிலையில், வழக்குரைஞா்கள் பெரும்பாலானோா் முகக்கவசம் அணியாமல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், இதனை கவனித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி கருத்து தெரிவித்தாா்.

நீதிமன்றத்தில் இப்போது பல்வேறு நீதிபதிகள், பணியாளா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, அனைத்து வழக்குரைஞா்களும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து வர வேண்டும். முக்கியமாக நீதிமன்ற அறைகளுக்கு வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா்.

அப்போது நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, எனக்கு கரோனா இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்தது. ஆனால், மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்விக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றாா். இதையடுத்து, அவா் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகள் என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.