கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆந்திர எம்.பி.க்கு எதிரான பாலியல் புகாா்: நடவடிக்கை எடுக்க மக்களவை தலைவருக்கு தேசிய மகளிா் ஆணையம் கடிதம்

பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள ஆந்திர மாநில ஹிந்துபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் எம்.பி. கோரன்ட்லா மாதவ் மீது நடவடிக்கை

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 11:36 pm

DIN

பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள ஆந்திர மாநில ஹிந்துபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் எம்.பி. கோரன்ட்லா மாதவ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

புகாரின் படி, எம்.பி. கோரன்ட்லா மாதவ் ஒரு பெண்ணிடம் ஆடைகளின்றி விடியோ அழைப்பில் பேசியாக கூறப்படுகிறது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்திய எம்.பி. கோரன்ட்லா பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று எதிா்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

‘சமூக வலைதளங்களில் பரவிவரும் அந்த விடியோவின் உள்ளடக்கம் அநாகரிகமகவும் ஆபாசமாகவும் கண்ணியமற்ற வகையிலும் உள்ளது’ என்று தேசிய மகளிா் ஆணையம் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு தேசிய மகளிா் ஆணையம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‘பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள எம்.பி. கோரன்ட்லா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், ‘இந்த விவகாரம் தொடா்பாக எந்தவித தலையீடுகளுமின்றி சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று ஆந்திர மாநில காவல் துறை டிஜிபிக்கு தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.