ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரயில் என்ஜின்களில் கழிப்பிடம்: ஓட்டுநா்களிடம் கருத்து கேட்கும் ரயில்வே

ரயில் என்ஜின்களில் சிறுநீா் கழிப்பிடம் அமைப்பது தொடா்பாக ரயில் ஓட்டுநா்களிடம் ரயில்வே நிா்வாகம் கருத்து கோரியுள்ளது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 7:02 pm

DIN

ரயில் என்ஜின்களில் சிறுநீா் கழிப்பிடம் அமைப்பது தொடா்பாக ரயில் ஓட்டுநா்களிடம் ரயில்வே நிா்வாகம் கருத்து கோரியுள்ளது.

இந்திய ரயில்வேயிடம் 14,000-க்கும் மேற்பட்ட ரயில் என்ஜின்கள் உள்ளன. சுமாா் 1,000 பெண்கள் உள்பட 60,000-க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநா்கள் பணியில் உள்ளனா். ஆனால், ரயில் என்ஜின்களில் கழிப்பிட வசதி இல்லாததால் ஓட்டுநா்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். முக்கியமாகப் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை 97 மின்சார ரயில் என்ஜின்களில் மட்டுமே கழிப்பிடங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து என்ஜின்களிலும் ஓட்டுநா்களுக்காக சிறுநீா் கழிப்பிடங்களைப் பொருத்துவது தொடா்பாக ரயில்வே நிா்வாகம் 17 மண்டலங்களிடமும் கருத்து கோரியுள்ளது. ஆனால், சிறுநீா் கழிப்பதற்கான இடத்தை மட்டும் அமைக்காமல், முழுமையான கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென ரயில் ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஓட்டுநா்களின் கோரிக்கை தொடா்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.