கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

‘வீட்டில் தொழுகை நடத்தினால் கைதா?’ - அசாதுதீன் ஓவைசி கேள்வி 

வீட்டில் தொழுகை நடத்தியதற்காக வழக்கு பதிந்த செயலை கண்டித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம் (அசாதுதீன் ஓவைசி)

Updated On :29 ஆகஸ்ட் 2022, 4:24 pm IST

வீட்டில் தொழுகை நடத்தியதற்காக வழக்கு பதிந்த செயலை கண்டித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். 

உத்திரப்பிரதேசம், மொராதாபத் மாவட்டம் சாஜ்லெட் பகுதியில் பள்ளிவாசல்கள் அருகில் இல்லாததால், வீட்டில் அதிக நபர்கள் திரண்டு தொழுகை நடத்தியதாக விடுகளின் உரிமையாளர் உட்பட 16 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் அந்த இரண்டு உரிமையாளர்களும் தலைமறைவாகியுள்ளனர் என  காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுக்குறித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: 

தொழுகை எங்கு வேண்டுமானாலும் செய்யலாமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பின்பு ஏன் வீட்டில் தொழுகை நடத்தியது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது? இது அநியாயம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.