வீட்டில் தொழுகை நடத்தியதற்காக வழக்கு பதிந்த செயலை கண்டித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம், மொராதாபத் மாவட்டம் சாஜ்லெட் பகுதியில் பள்ளிவாசல்கள் அருகில் இல்லாததால், வீட்டில் அதிக நபர்கள் திரண்டு தொழுகை நடத்தியதாக விடுகளின் உரிமையாளர் உட்பட 16 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் அந்த இரண்டு உரிமையாளர்களும் தலைமறைவாகியுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:
தொழுகை எங்கு வேண்டுமானாலும் செய்யலாமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பின்பு ஏன் வீட்டில் தொழுகை நடத்தியது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது? இது அநியாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தலைமைச்செயலத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



