மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிராமண எதிர்ப்பு! ஜேஎன்யு பல்கலை. சுவர் வாசகங்களுக்கு கண்டனம்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

News image
Updated On :2 டிசம்பர் 2022, 10:34 am

DIN


ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

சர்வதேச மாணவர்கள் பயிலும் பல்கலைக் கழகத்தின் சுவர்களில், பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதியதற்கு பல்கலைக் கழக துணை வேந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Story image

தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் பயிலும் சர்வதேச கல்வி நிலையமாகவும் ஜேஎன்யு திகழ்கிறது. 

இந்நிலையில், பல்கலைக் கழகத்தின் சுவர்கள் மற்றும் பேராசிரியர்களின் அறைகளில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. ''பிராமணர்களே பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறுங்கள்'', ''ரத்தம் சிந்தப்படும்'', ''நாங்கள் உங்களுக்காக வருகிறோம்'' என்பன போனற வாசகங்கள் சிவப்பு மையினால் எழுதப்பட்டுள்ளன. பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் இதனைச் செய்ததாக கூறப்படுகிறது. 

Story image

இது தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக் கழக துணை வேந்தர், பேராசிரியர் சாந்திஸ்ரீ டி. பண்டிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக் கழகத்தின் சுவர்களின் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்களுடன் காழ்ப்புணர்ச்சியை சிலர் எதிர்வினையாக வெளிப்படுத்தியுள்ளனர். 

பல்கலைக் கழக வளாகத்தினுள் இது போன்ற பிரிவினைவாத செயல்களுக்கு நிர்வாகம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. ஜேஎன்யு மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஜேஎன்யு நிர்வாகம் அனைவரிடமும் அரவணைப்பையும் சமத்துவத்தையுமே விரும்புகிறது. இதுபோன்ற செயல்கள் இனி தொடர்ந்தால் நிர்வாகம் தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.