குஜராத் தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59% வாக்குப்பதிவு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
குஜராத் தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59% வாக்குப்பதிவு
Updated on
1 min read

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு கொண்டுசெல்லப்பட்டன. 

குஜராத்திலுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதில் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதனைத் தொடர்ந்து 93 தொகுதிகளுக்கு இன்று (டிச.5) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தின் மத்திய, வடக்கு பகுதிகளில் உள்ள 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 

இந்நிலையில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 58.4 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com