
கொல்கத்தா அருகே உள்ள நியூ டவுனில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 சாலையோரக் கடைகள் எரிந்து நாசமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கௌரங்காநகரில் உள்ள தளாய் பாலம் அருகே உள்ள பாக்ஜோலா கால்வாயை ஒட்டிய கடை ஒன்றில் அதிகாலை 4 மணியளவில் தீப்பிடித்துள்ளது.
தீயானது மளமளவென அப்பகுதியில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.