டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி வெற்றி!

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தலித் செயல்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி வத்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். 

ஜிக்னேஷ் மேவானி (கோப்புப் படம்)

Published On :

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தலித் செயல்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி, வத்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். 

2017ஆம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நிலையில், இம்முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை ஆதரிக்கும் வகையில் 

41 வயதான ஜிக்னேஷ், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் என்ற அமைப்பின் மூலம் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். 

முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள வத்கம் தொகுதியில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் 90,000 முஸ்லீம் ஓட்டுகள் உள்ளன. 44,000 பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓட்டுகளும், 15,000 ராஜ்புட் வகுப்பைச் சேர்ந்த ஓட்டுகளும் உள்ளன. 

இதில், பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார். 

182 தொகுதிகளுடைய குஜராத்தில், 150க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றவுள்ளது. 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 149 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.