எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மோர்பி தொகுதியில் யார் முன்னிலை?

குஜராத் மாநிலம் தொங்கு பால விபத்து நடைபெற்ற மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது.

News image

விபத்துக்குள்ளான மோர்பி பாலம்| பாஜக வேட்பாளர் காண்டிலால் அம்ருதியா

Updated On :1 பிப்ரவரி 2024, 4:33 pm IST

குஜராத் மாநிலம் தொங்கு பால விபத்து நடைபெற்ற மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி என்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.

இதில், மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேரை பலி வாங்கிய மோர்பி தொகுதியும் அடங்கும். இந்த தொகுதியின் வெற்றியை நாடே எதிர்நோக்கியுள்ளது.

கடந்த முறை பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பிரிஜேஷ் மெர்ஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. மாறாக, தொங்கு பாலம் விபத்து ஏற்பட்ட போது ஆற்றில் குதித்து உயிருக்கு போராடியவர்களை மீட்ட முன்னாள் எம்எல்ஏ காண்டிலால் அம்ருதியா வாய்ப்பளித்தது பாஜக.

அவருக்கு எதிராக காங்கிரஸிலிருந்து படேல் ஜெயந்திலால் ஜெராஜ்பாய் என்பவர் களமிறக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே மோர்பி பாஜக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் 70502 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 38269 வாக்குகளும் 1 மணி நிலவரப்படி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.

மேலும், 182 தொகுதிகளில் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.