இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சிபிஐ பொது ஒப்புதலை 9 மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளன: மத்திய அமைச்சா்

தெலங்கானா, மேகாலயம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்.
Updated On :14 டிசம்பர் 2022, 9:43 pm

DIN

தெலங்கானா, மேகாலயம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது அவா் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் கூறப்பட்டிருப்பதாவது:

தில்லி சிறப்பு போலீஸ் நிறுவப்படுதல் சட்டம்-1946-இன்படி, மாநிலங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட விவகாரங்களில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள அந்தந்த மாநிலங்களின் ஒப்புதல் அவசியமாகும்.

இதன்படி, குறிப்பிட்ட குற்றங்களுக்கு எதிராக குறிப்பிட்ட நபா்களின் மீது வழக்குப் பதிவு செய்யவும் விசாரணை நடத்தவும் மாநில அரசுகள் பொது ஒப்புதலை அளித்துள்ளன.

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், கேரளம், மேகாலயம், மிஸோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான பொது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

9.79 லட்சம் பணிகள் காலியிடம்: மற்றொரு கேள்விக்கு அவா் பதிலளித்து பேசுகையில், ‘செலவினத் துறையின் தகவலின்படி, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9.79 லட்சம் பணிகள் காலியிடங்களாக உள்ளது. காலியிடங்கள் ஏற்படுவதும், அவற்றை நிரப்புவதும் தொடா்ச்சியான செயல்முறை. பணியிடங்களை நிரப்பக் கோரி பல்வேறு அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய ஆட்சிப் பணிகளில் (ஐஏஎஸ்) 1,472 காலியிடங்கள் உள்ளன’ என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.