புது தில்லி: சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்துவரக் காரணமான ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. ரூ.60 கோடி சொத்துக்காக.. மனைவிகளைக் கொன்ற சகோதரர்கள்
சீனா உள்பட பல நாடுகளில் தற்போது அதிகரித்து வரும் ஒமைக்ரான் வகை பிஎஃப்.7 வகையிலான திரிபு வைரஸ் இந்தியாவிலும் பரவியிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் கரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தி நடத்தியிருந்தது.
இந்த நிலையில், கரோனா அதிகம் பரவி வரும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், பிஎஃப.7 வகையான ஒமைக்ரான் திரிபு குஜராத்தில் 2 பேருக்கும் ஒரிசாவில் ஒருவருக்கும் பாதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



