தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? போட்டிக்கு வந்த மற்றொரு மூத்த தலைவர்

அமரிந்தர் சிங் விலகிய பிறகு பஞ்சாப் எம்எல்ஏக்கள் பலர் தன்னை முதல்வராக்க விரும்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜக்கார் பேசுவது போன்ற விடியோ வெளியாகியுள்ளது.

News image
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
Updated On :2 பிப்ரவரி 2022, 9:30 am

DIN

பஞ்சாபில் வரும் பிப்ரிவரி 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் பெரும் சிக்கல் நிலவிவருகிறது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங், தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னி ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

அதேபோல, மூத்த தலைவர் சுனில் ஜக்காருக்கும் கட்சியில் பல்வேறு தரப்பினரின் ஆதரவு இருப்பதால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் தொடர் குழுப்பம் நிலவிவருகிறது. இந்நிலையில், அமரிந்தர் சிங் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு,  பஞ்சாப் எம்எல்ஏக்கள் பலர் தன்னை முதல்வராக்க விரும்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜக்கார் பேசுவது போன்ற விடியோ வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த விடியோ அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், காங்கிரஸ் பிரசார குழு தலைவராக உள்ள ஜக்கார், அளிப்பதற்கு தனக்கு எந்தவிதமான புகாரும் இல்லை என்றும் எது சரியோ கடவுள் அதையே செய்திருக்கிறார் என்றும் பஞ்சாபி மொழியில் அவர் பேசியுள்ளார்.

மேலும், முதல்வர் பொறுப்பிலிருந்து அமரிந்தர் விலகிய பிறகு, பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தன்னை முதல்வராக்க விரும்பியதாக ஜக்கார் குறிப்பிடுவது போல விடியோவில் பதிவாகியுள்ளது.

"46 எம்எல்ஏக்கள் எனக்கும், 16 பேர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவுக்கும், 12 பேர் பிரனீத் கவுருக்கும், 6 பேர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், 2 பேர் (சரண்ஜித் சிங்) சன்னிக்கும் வாக்களித்தனர்" என்றும் ஜக்கார் கூறியுள்ளார். அப்போது, அங்கு கூடியிருப்போர் சிரிக்கின்றனர். 

அமரிந்தருக்கு பிறகு அடுத்த முதல்வராக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

முன்னதாக, பிரதமர் மோடிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் சன்னி தலைமையிலான அரசை ஜக்கார் கடுமையாக விமரிசித்திருந்தார். அதேபோல், பல்வேறு விவகாரங்களில், சன்னி அரசை அவருக்கு போட்டியாக கருதப்படும் நவ்ஜோத் சிங் சித்து கடுமையாக சாடியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.