விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தில்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வு

தில்லி சாஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திடீர் ஆய்வு மேற்கொண்டார்

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 12:38 pm

DIN

தில்லி சாஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

முன்அறிவிப்பின்றி, திடீர் ஆய்வு செய்த அவர், மருத்துவமனை நிர்வாகிகளுடனும், மருத்துவர்களுடனும் கலந்துரையாடினார். 

தில்லியில் கரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சாஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், நோயாளிகளுக்கு எந்த குறையும் இல்லாமல்  சிறப்பான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர்,  மருத்துவமனையில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.