மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நாடு முழுவதும் இரண்டே மாதங்களில் 27 புலிகள் பலி

நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய வனஉயிரின பாதுகாப்பு கூட்டுறவு தெரிவித்துள்ளது.

News image

நாட்டில் இரண்டே மாதங்களில் 27 புலிகள் பலி

Updated On :26 பிப்ரவரி 2022, 11:23 am IST

நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய வனஉயிரின பாதுகாப்பு கூட்டுறவு தெரிவித்துள்ளது.

புலிகளின் இருப்பு என்பது வளமான காடு என்பதற்காக அளவீடாகும். பல்லுயிர் சூழலைக் காக்க புலிகளை பாதுகாப்பது அவசியம். புலிகளைக் காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அவற்றின் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. 

இந்நிலையில் இந்திய வன உயிரின பாதுகாப்பு கூட்டுறவு எனும் அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின்படி நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 27 புலிகள் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, “கடந்த 2 மாதங்களில் பலியான புலிகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. புள்ளி விவரங்களின்படி இரண்டு நாள்களுக்கு ஒரு புலி இறந்துள்ளது. இது மோசமானது” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 9 புலிகளும், மகாராஷ்டிரமில் 6 புலிகளும், 5 புலிகள் கர்நாடகத்திலும், கேரளம் மற்றும் அசாமில் தலா 2 புலிகளும், ராஜஸ்தான், ஆந்திரம், பிகாரில் தலா 1 புலியும் உயிரிழந்துள்ளன. மேலும் வேட்டையாடுதலினால் 7 புலிகளும் கொல்லப்பட்டுள்ளன.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி 2012ஆம் ஆண்டு 88 புலிகளும், 2013ஆம் ஆண்டு 68 புலிகளும், 2014ஆம் ஆண்டு 78 புலிகளும், 2015ஆம் ஆண்டு 82 புலிகளும், 2016ஆம் ஆண்டு 121 புலிகளும், 2017ஆம் ஆண்டு 117 117, 2018ஆம் ஆண்டு 101 புலிகளும், 2019ஆம் ஆண்டு 96 புலிகளும், 2020ஆம் ஆண்டு 106 புலிகளும், 2021ஆம் ஆண்டு 127 புலிகளும் நாடு முழுவதும் பலியாகியுள்ளன.

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் அதிகமான புலிகள் அடர்த்தியைக் கொண்ட மாநிலமாக உள்ளது. 100 சதுர அடிக்கு 14 புலிகள் அங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.