

உக்ரைனிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் மக்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்க கர்நாடக அரசு திங்கள்கிழமை முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சிவயோகி சி கலாசாத் கூறுகையில்,
உக்ரைனிலிருந்து திரும்பும் மக்கள், குறிப்பாக மாணவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கும் மக்களுக்கு கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் இலவசப் பயணத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலத்திற்குள்ளேயே இருக்கும் மாவட்டங்களுக்கு மக்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.