ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சபரிமலையில் மகரவிளக்கு கால தரிசனம் இன்றுடன் நிறைவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றுடன் (ஜன.19) மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இதையடுத்து, நாளை (ஜன. 20) காலை கோயில் நடை சாத்தப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2022, 5:50 am

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றுடன் (ஜன.19) மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இதையடுத்து, நாளை (ஜன. 20) காலை கோயில் நடை சாத்தப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் 12ம்-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொங்கல் நாளான கடந்த 14-ஆம் தேதி புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது.

கடந்த ஐந்து நாள்களாக திருவாபரண அலங்காரத்துடன் இருந்த ஐயப்பனை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். மாலை அணிந்து வரும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றுடன் சபரிமலையில் மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நாளை காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும் எனவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.