வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லியில் கடும் பனிமூட்டம்: 21 ரயில்கள் தாமதம்

தலைநகர் தில்லியில் கடந்த சில தினங்களாக காலையில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக தில்லி செல்லும் ரயில்கள் தாமதமாக வந்தவண்ணம் உள்ளன. 

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜனவரி 2022, 6:13 am

DIN

தலைநகர் தில்லியில் கடந்த சில தினங்களாக காலையில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக தில்லி செல்லும் ரயில்கள் தாமதமாக வந்தவண்ணம் உள்ளன. 

வெள்ளிக்கிழமை காலையும் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் 21 ரயில்கள் தாமதமாக வந்ததாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

பூரி புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், கயா புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ், சஹர்சா புது தில்லி எக்ஸ்பிரஸ், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ், பிரயாக்ராஜ் - புது தில்லி எக்ஸ்பிரஸ், சென்னை - புது தில்லி எக்ஸ்பிரஸ் மற்றும் லக்னோ - புது தில்லி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரயில்கள் இன்று தாமதமாக வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று காலை 8.30 மணிக்கு நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவிலே தொடர்ந்து நீடித்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 353 ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.