தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.பி.என். சிங், பாஜகவில் இணைந்ததையடுத்து, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
அவிநாஷ் பாண்டே
Updated On :27 ஜனவரி 2022, 9:17 am

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.பி.என். சிங், பாஜகவில் இணைந்ததையடுத்து, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆர்.பி.என். சிங் கடந்த செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார். புதிய அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகக் கூறிய அவர், தேசத்துக்கும் மக்களுக்கும் கட்சிக்கும் சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ஆர்.பி.என். சிங்கின் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும், உத்தர பிரதேசத்தின் குஷிநகா் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஆவார். 

காங்கிரஸிலிருந்து ஆர்.பி.என். சிங் விலகியதை அடுத்து, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.