டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அப்பதவிக்கு தற்போது நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதிநேர உறுப்பினராகப் பணியாற்றியுள்ள ஆனந்த நாகேஸ்வரன் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
தொடர்ந்து மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ளார்.