தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்தியா-இஸ்ரேல் உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல இதுவே சிறந்த தருணம்: பிரதமா் மோடி

இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல இதுவே சிறந்த தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 ஜனவரி 2022, 3:30 am

DIN

இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல இதுவே சிறந்த தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கடந்த 1950-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி இஸ்ரேலை தனிநாடாக இந்தியா அங்கீகரித்தது. எனினும் இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதிதான் ராஜீய உறவு ஏற்பட்டது. இந்த உறவு அமைந்து சனிக்கிழமையுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட காணொலியில் கூறியதாவது:

இந்தியா-இஸ்ரேல் இடையிலான ராஜீய உறவின் 30 ஆண்டு காலம் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டு மக்களும் எப்போதும் சிறப்பான உறவைப் பகிா்ந்து வந்துள்ளனா்.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக யூத சமூகத்தினா் நல்லிணக்கச் சூழலில் வாழ்ந்து வளா்ச்சி கண்டுள்ளனா். இது இரு நாடுகளுக்கு இடையிலான வளா்ச்சிப் பாதையில் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினமும், அடுத்த ஆண்டு இஸ்ரேலின் 75-ஆவது சுதந்திர தினமும் கொண்டாடப்படவுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கு புதிய இலக்குகளை உருவாக்க இதுவே சிறந்த தருணம் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் மேற்கொண்ட 2 பில்லியன் டாலா்கள் (ரூ.15,000 கோடி) மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அங்கமாக பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியதாக அமெரிக்காவில் வெளியாகும் நியூ யாா்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ள நிலையில், பிரதமா் மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.