பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

'உண்மையான ஹிந்துத்துவவாதி ஜின்னாவை கொன்றிருப்பார்; காந்தியை அல்ல'

உண்மையான ஹிந்துத்துவவாதி காந்தியடிகளை கொன்றிருக்க மாட்டார் என்றும், முகமது அலி ஜின்னவையே கொன்றிருப்பார் எனவும் சிவசேனை கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2022, 5:17 pm IST

உண்மையான ஹிந்துத்துவவாதி காந்தியடிகளை கொன்றிருக்க மாட்டார் என்றும், முகமது அலி ஜின்னவையே கொன்றிருப்பார் எனவும் சிவசேனை கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார். 

காந்தியை ஹிந்து அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றது குறித்த ராகுல் காந்தியின் சுட்டுரைக்கு பதிலளித்து சஞ்சய் ரெளத் இந்த கருத்தை  தெரிவித்தார்.

ஹிந்துத்துவவாதி காந்தியை சுட்டுக்கொன்றார். அனைத்து ஹிந்துத்துவவாதிகளும் காந்தி இல்லை என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்னவெனில், உண்மை உயிரோடு இருக்கும் இடத்தில் காந்தி உயிர்ப்போடு உள்ளார் என்று ராகுல் காந்தி தமது சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். 

இது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத், உண்மையான ஹிந்துத்துவவாதி பாகிஸ்தானை உருவாக காரணமான முகமது அலி ஜின்னாவையே கொன்றிருப்பார். காந்தியை அல்ல என்று கூறினார்.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி ஹிந்து மகாசபையின் உறுப்பினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான நாதுராம் கோட்சே, தில்லி பிர்லா இல்லத்தில் வழிபாட்டை முடித்துவந்த காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.