ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: அமர்நாத் பயணிகள் 4 பேர் காயம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்ற நான்கு பயணிகள் காயமடைந்தனர்.
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: அமர்நாத் பயணிகள் 4 பேர் காயம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்ற நான்கு பயணிகள் காயமடைந்தனர்.

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஷெர்பிபி பகுதிக்கு அருகே அமர்நாத் யாத்திரையின் பஹல்காம் அடிப்படை முகாமுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்தில் நான்கு பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சத்தீஸ்கரைச் சேர்ந்த விநாயக் குப்தா, அனிதா மற்றும் குடியா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com