நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கன்னையா லால் கொலை வழக்கு: குற்றவாளிகள் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கன்னையா லால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று முன்னிறுத்தப்பட உள்ளனர். 

News image
Updated On :2 ஜூலை 2022, 6:47 am

DIN

உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரரான கன்னையா லால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று முன்னிறுத்தப்பட உள்ளனர். 

முக்கிய குற்றவாளிகளான ரியாஸ் மற்றும் கௌஸ் முகமது ஆகியோர் அஜ்மீர் உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும், வியாழன் இரவு கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு குற்றவாளிகளான மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகியோர் ஏற்கனவே ATS தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காகத் தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதையடுத்து குற்றவாளிகள் நால்வரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.