கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஃபட்னவீஸ் மட்டும் ஒப்புக்கொண்டிருந்தால்.. : சட்டப்பேரவையில் ஆதித்ய தாக்கரே பேச்சு

தேவேந்திர ஃபட்னவீஸ் மட்டும் ஒப்புக்கொண்டிருந்தால், இந்த நிலைமையே வந்திருக்காது என சிவசேனை எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

News image
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்துக்குப் பிறகு..
Updated On :3 ஜூலை 2022, 10:34 am

DIN


தேவேந்திர ஃபட்னவீஸ் மட்டும் ஒப்புக்கொண்டிருந்தால், இந்த நிலைமையே வந்திருக்காது என சிவசேனை எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

ஆதித்ய தாக்கரே பேசியதாவது:

"தேவேந்திர ஃபட்னவீஸிடம் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று கூறினோம். இதற்கு அவர் ஒப்புக்கொண்டிருந்தால், இந்த நிலைமையே வந்திருக்காது. இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டதால், பெரும்பாலும் இதுவும்கூட மாறியிருக்கும்" என்றார்.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இன்று வந்திருந்த அதிருப்தி எம்எல்ஏ-க்களால் எங்களைப் பார்க்கவே முடியவில்லை. எத்தனை நாள்களுக்கு இப்படி ஒரு விடுதியிலிருந்து இன்னொரு விடுதிக்கு மாறப்போகிறீர்கள்? ஒருநாளைக்கு இவர்கள் அவரவர் சட்டப்பேரவைத் தொகுதிக்குச் செல்ல வேண்டும். அப்போது எப்படி அவர்கள் மக்களை எதிர்கொள்வார்கள்?" என்றார் ஆதித்ய தாக்கரே.

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், இரண்டு கட்சிகளுக்கிடையே உடன்பாடு எட்டப்படாததால், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.