லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராகுல் பேச்சை திரித்து காணொலி: தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகாா்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,

News image
Updated On :6 ஜூலை 2022, 9:00 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செய்தி ஒலிபரப்பு மற்றும் எண்ம (டிஜிட்டல்) தரநிலைகள் ஆணையத்திடம் (என்பிடிஎஸ்ஏ) அக்கட்சி புகாா் அளித்துள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜூலை 1-ஆம் தேதி ‘ஜீ’ செய்தித் தொலைக்காட்சியில் ‘டிஎன்ஏ’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தானில் தையல்காரா் கன்னையா லாலை கொலை செய்தவா்கள் மீது அனுதாபம் காட்டும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக தவறாகவும், தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் காணொலி வெளியானது. ஆனால், உண்மையில் அவா் கூறிய கருத்துகள் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள தனது அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டவையாகும்.

இதன் மூலம், கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க் ஒழுங்காற்று சட்டம் 1995, கேபிள் தொலைக்காட்சி நெட்வொக் விதிமுறைகள் 1994, தொழில் கோட்பாடுகள் மற்றும் ஒளிபரப்பு தரநிலைகளை அத்தொலைக்காட்சி மீறியுள்ளது.

எனவே, அந்தத் தொலைக்காட்சி, ‘டிஎன்ஏ’ நிகழ்ச்சித் தொகுப்பாளா் ரோஹித் ராஜன் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.