இதுதொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அஜோய் குமாா் கூறுகையில், ‘உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து காதி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி கூறி வருகிறாா். ஆனால், சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பாலிஸ்டரிலான இந்திய தேசியக் கொடிகளை பெருமளவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தேசியக் கொடிகளைத் தயாரித்து வரும் ஆயிரக்கணக்கான காதித் தொழிலாளா்கள் பணி இழப்பாா்கள். பாலிஸ்டா் தேசியக் கொடிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் காதி அமைப்பு அழிந்துவிடும். மகாத்மா காந்தியின் மரபும் மறைந்துவிடும். இதைக் கண்டித்து கா்நாடக காதி கிராமோத்யோக் சங்கத்தினா் ஜூலை 30-இல் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளனா்.