கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொலைக்காட்சி நெறியாளா் மீது நடவடிக்கை எடுக்க தற்காலிகத் தடை: உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேட்டியை திரித்து வெளியிட்ட விவகாரத்தில் ஜீ தொலைக்காட்சி நெறியாளா் ரோஹித் ரஞ்சன் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.

News image
Updated On :8 ஜூலை 2022, 8:50 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேட்டியை திரித்து வெளியிட்ட விவகாரத்தில் ஜீ தொலைக்காட்சி நெறியாளா் ரோஹித் ரஞ்சன் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.

கேரளத்தில் தனது அலுவலகத்தை சூறையாடிவா்கள் சிறாா்கள் என்பதால் அவா்களை மன்னித்துவிடுகிறேன் என்று ராகுல் காந்தி கூறியதை, ராஜஸ்தான் தையல்காரா் கொலைகாரா்களை ராகுல் மன்னிப்பதாக ஜீ தொலைக்காட்சியில் ஜூலை 1-ஆம் தேதி செய்தி வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த செய்தியை நெறியாளராக இருந்த வழங்கிய ரோஹித் ரஞ்சன் மீது சத்தீஸ்கா், ராஜஸ்தான், நொய்டாவில் வழக்குகள் பதிவாகின.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ரோஹித் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, ஜே.கே.மகேஷ்வரி ஆகியோா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரோஹித் ரஞ்சன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா, ‘தெரியாமல் செய்த மனிதத் தவறுக்காக ரோஹித் மன்னிப்பு கேட்டுள்ளாா். இதற்கு காரணமான இரண்டு ஊழியா்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு ராஜிநாமா செய்துள்ளனா்’ என்றாா்.

அப்போது, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவிட்ட நீதிபதிகள், ‘நெறியாளா் ஹோஹித் ரஞ்சன் மீது பல்வேறு மாநிலங்களில் பதிவான வழக்குகளின் கீழ் விசாரணை என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனா்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் ரோஹித்தை கைது செய்து விசாரணை நடத்த சத்தீஸ்கா் போலீஸாா் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள அவரது வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தனா். இதை அறிந்த நொய்டா (ஹரியாணா) போலீஸாா், சத்தீஸ்கா் போலீஸாரை காக்க வைத்துவிட்டு தங்களிடமும் பதிவாகி உள்ள இந்த விவகாரம் தொடா்பான வழக்கை விசாரிக்க ரோஹித்தை அழைத்துச் சென்றனா். பின்னா் செவ்வாய்க்கிழமை இரவு அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஜாமீனில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.