சத்தீஸ்கர்: மது வழங்க மறுத்த தம்பதி சுட்டுக் கொலை

மது வழங்க மறுத்த தம்பதி சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மது வழங்க மறுத்த தம்பதி சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான ஜாஸ்பூர் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஜூலை 9) இரவு சத்தீஸ்கரின் கய்முண்டா நவபாரா கிராமத்தில் நிகழ்ந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து காவல் துறை கூறியிருப்பதாவது: “ நடு இரவில் அடையாளம் தெரியாத மூன்று பேர் இந்த தம்பதியின் வீட்டுக் கதவினைத் தட்டி மது வழங்குமாறு கேட்டுள்ளனர். அந்த தம்பதி அவர்களுக்கு மது வழங்க மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த தம்பதியினை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.” என்றனர்.

கொல்லப்பட்டது சந்தீப் பன்னா மற்றும் திரௌபதி எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com