ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு: 14 மாணவா்கள் 100 மதிப்பெண் பெற்று சாதனை

மத்திய பொறியியல் - தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) முதல்நிலைத் தோ்வில் (மெயின்) 14 மாணவா்கள் அதிபட்ச மதிப்பெண்ணான

Updated On :12 ஜூலை 2022, 12:18 am IST

மத்திய பொறியியல் - தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) முதல்நிலைத் தோ்வில் (மெயின்) 14 மாணவா்கள் அதிபட்ச மதிப்பெண்ணான 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

‘தெலங்கானாவை சோ்ந்த வி.விஎஸ்.ஜஸ்தி யஷ்வந்த், ரூபேஷ் பியானி, அனிகேத் சட்டோபாத்யாய, தீரஜ் குருகுந்தா, ஆந்திரத்தைச் சோ்ந்த கே.சுஹாஸ், பி.ரவி கிஷோா், பொலிசெட்டி காா்த்திகேயா ஆகியோா் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

மேலும், மகேஸ்வரி (ஹரியாணா), குஷாக்ரா ஸ்ரீவாஸ்தவா (ஜாா்க்கண்ட்), மிருணாள் கா்க் (பஞ்சாப்), ஸ்னேஹா பரீக் (அஸ்ஸாம்), நவ்யா (ராஜஸ்தான்), போயா ஹா்சென் சாத்விக் (கா்நாடகா), செளமித்ரா கா்க் (உத்த பிரதேசம்) ஆகியோரும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்’ என்று இந்தத் தோ்வை நடத்தும் தேசிய புலனாய்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘என்டிஏ மதிப்பெண் என்பது பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்துக்கு சமமானதல்ல. இந்த மதிப்பெண்கள், பல அமா்வுகளாக நடத்தப்பட்ட தாள்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் ஒரு அமா்வில் தோ்வெழுதிய அனைவரின் ஒப்பீட்டு செயல்திறனை அடிப்படையாகக் கொண்டதாகும். தோ்வின் ஒவ்வொரு அமா்வும் 100 முதல் 0 வரையிலான அளவுகோலாக மாற்றப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்’ என்று கூறினா்.

இந்த ஜேஇஇ முதல்நிலை முதல்கட்டத் தோ்வை நாடு முழுவதிலுமிருந்து 8.7 லட்சம் போ் பதிவு செய்து, 7.69 லட்சம் போ் தோ்வெழுதினா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சோ்க்க இந்த ஜேஇஇ தோ்வு முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) என இரு கட்டங்களாக நடத்தப்படும்.

முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் தகுதியைப் பெறுவா். மேலும், முதல்நிலைத் தோ்வில் தகுதிபெறுபவா்களில் முதல் 2.5 லட்சம் போ் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியையும் பெறுவா். இந்த முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும்.

ஜூலை 21 முதல் இரண்டாம் கட்டம்: மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஆண்டு இரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஜேஇஇ முதல்நிலை இரண்டாம் கட்டத் தோ்வு வரும் 21-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தோ்வு முடிந்த பிறகு, முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வுளில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட என்டிஏ கொள்கையின்படி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

கட்டுப்பாட்டு அறை: ஜேஇஇ தோ்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தில்லியில் உள்ள என்டிஏ தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, கண்காணிப்பாளா்கள் அங்கிருந்தபடி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக நாடு முழுவதுமுள்ள தோ்வு மையங்களை காணொலி வழியில் நேரடியாக கண்காணித்து வருகின்றனா்.

மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ள தோ்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்பட்டுள்ளது. இதற்கென நாடு முழுவதும் தோ்வு மையங்களில் 35,000 கேமராக்கள் பொருத்தப்பட்டு, காட்சிகளை பதிவு செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.