
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் கனடா? அழைப்புக்கு பிரதமர் கார்னி வரவேற்பு!
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணை உறுப்பினராக இணைவதற்கான அழைப்பை கனடா பிரதமர் கார்னி வரவேற்றுள்ளார்...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உருசுலா உடன் கனடா பிரதமர் கார்னி... - ஏபி
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைய கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைவதற்கு கனடாவுக்கு நேற்று (செப். 17) அந்த அமைப்பின் தலைவர் உருசுலா வொன் டெர் லெயன் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வரும் கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, முதல் இணை உறுப்பினராக இணையுமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அழைப்பை வரவேற்றுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசுகையில்,
“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இணைந்து பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலால் ஏற்படும் அழுத்தங்களால் இருதரப்புக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வர்த்தகம், செய்யறிவு, விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முதன்முதலாக கனடாவுக்கு முன்மொழியப்பட்ட இணை உறுப்பினர் எனும் பதவியின் விவரங்கள் குறித்த முழுமையாக தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்பினர் பதவியைக் கோரவில்லை என பிரதமர் கார்னி கூறியுள்ளார்.
கனடா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த நிலையில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகளில் கடந்த சில காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவருவதாலும், அதிகப்படியான வர்த்தக வரிகளாலும் ஐரோப்பா உடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை கனடா அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Canadian PM Mark Carney has welcomed the invitation extended to Canada to join the European Union as its first associate member.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







